தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.12.11

மாவட்டக் கல்வி அலுவலர்கள் 69 பேர் மாற்றம்

தமிழகம் முழுவதும், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக மாற்றப்பட்டதோடு, மாவட்டக் கல்வி அலுவலர்களாக, 46 பேர், பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையில், சமீபத்தில், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களும், இவர்களைத் தொடர்ந்து, 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 19 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 46 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ளார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்