தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.12.11

திறந்த நிலை பல்கலை பட்டங்கள் மத்திய அரசு தேர்வுகளுக்கு அனுமதி; மாநில அரசு தேர்வுகளுக்கு இல்லை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் நேரடி பட்டம் பெறுவோர், மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்கப் படுகின்றனர். மாநில அரசு தேர்வுகளுக்கு, இவர்களை அனுமதிக்காதது, முரண்பாடாக உள்ளது.

சென்னைப் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, அண்ணாமலைப் பல்கலை உள்ளிட்டவை, திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வந்தன.
கடந்த, 2003 - 04 கல்வியாண்டில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை உருவாக்கப்பட்டது. தற்போது, மாநில அளவில் இந்த பல்கலை மட்டுமே, திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக, 20 ஆயிரம் பேர், இப்பல்கலையின் நேரடி முறையில் பட்டம் பெறுகின்றனர். அதாவது, பிளஸ் 2 முடிக்காமல், 18 வயதை மட்டும் தகுதியாகக் கொண்டு, இளநிலைப் படிப்புகளில் பட்டம் பெறுகின்றனர்.
இந்த முறையில் பட்டம் பெறுவோர், அரசு தேர்வில் பங்கேற்பு மற்றும் பதவி உயர்வு பெற தடைவிதித்து, முந்தைய தி.மு.க., அரசு, 2009 ஆகஸ்டில் அரசாணை பிறப்பித்தது.

பட்டதாரிகள் குமுறல் : 
"மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் தேர்வுகள், "ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்வுகளில் நாங்கள் பங்கேற்கும்போது, மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பங்குபெற தடைவிதிக்கப் பட்டிருப்பது முரணான செயலாக உள்ளது,' என, இப்பட்டதாரிகள் குமுறுகின்றனர்.

மிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், பி.ஏ., (வரலாறு) இறுதியாண்டு படிக்கும், புளியந்தோப்பைச் சேர்ந்த ஜிலானி கூறியதாவது
குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. தற்போது பட்டப் படிப்பு பயில்வது மகிழ்ச்சி அளிக்கிறது. முந்தைய தி.மு.க., அரசு, எங்களுக்கு எதிராக பிறப்பித்த அரசாணையால், என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான பேர், அரசு தேர்வுகளில் பங்குபெறும் வாய்ப்பை இழந்து வருகிறோம்.

தேர்வுகளில், போட்டியாளர்களின் திறமையை மட்டுமே பார்த்தால் போதும். அவர்கள் எந்த முறையில் பட்டம் பெற்றனர் என்பதற்கு, அரசு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. அரசு பணிகளுக்கான தேர்வுகளில் எங்களையும் அனுமதிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு ஜிலானி கூறினார்.

அரசிடம் கோரிக்கை: 
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின், பெயர் வெளியிட விரும்பாத, நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது
இந்தியாவில், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை உள்ளிட்ட, 14 பல்கலைகள், திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. இவற்றில், பிளஸ் 2 முடிக்காமல், நேரடியாக இளநிலைப் பட்டம் பெறுவோரும், மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்கலாம் என, யு.சி.ஜி., விதிமுறைகளில் உள்ளது. இதை மத்திய அரசும் செயல்படுத்தி வருகிறது.
எனவே, எங்கள் பல்கலையின் பிற பட்டதாரிகளைப் போல, நேரடியாக பட்டம் பெறுவோரும், மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்க வேண்டும். இதற்கு தடையாக உள்ள அரசாணை எண், 107யை திரும்பப் பெற, தமிழக அரசிடம் விரைவில் கோரிக்கை விடுக்க உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்