தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.7.11

ஆசிரியர்களின் வருகை: ஆன்-லைனில் பதிவு

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை ஆன்-லைனில் பதிவு செய்வதற்காக, நான்கு புதிய மொபைல் போன்கள், தேசிய தகவல் மையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, முதல் கட்டமாக, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வருகையை ஆன்-லைனில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு பள்ளிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கி, அதன் மூலம் தேசிய தகவல் மையத்திற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில், நேற்று (6ம் தேதி) முதல் அமல்படுத்தப்பட்ட இம்முறைப்படி, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், காலை 10 மணிக்கு எஸ்.எம்.எஸ்., மூலம், தேசிய தகவல் மையத்திற்கு அனுப்பினர்.

இதில், 80 சதவீத பள்ளிகளின் வருகைப் பதிவேடு, சரியான முறையில் பதிவானது. ஒரே நேரத்தில், 1,200க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்., வருவதால், மொபைல் போனில் பதிவாகாத நிலை இருந்தது. எனவே, மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியங்களை நான்காக பிரித்து, ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு மொபைல் போன் என கணக்கிட்டு, தேசிய தகவல் மையத்திற்கு, நான்கு புதிய மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்