தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.7.11

பள்ளி பராமரிப்பு மானியம் ரூ. 10 ஆயிரம் அதிகரிப்பு

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு சமீபத்தில் பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டது. 

இதன்படி துவக்க கல்வித் துறையில் 5 வரையுள்ள துவக்கப் பள்ளிகளுக்கு ரூ. 5 ஆயிரம், 6 முதல் 8 வரையுள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 7 ஆயிரம், 1 முதல் 8 வரையுள்ள பள்ளிகளுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையில் 6 முதல் 8 வரையுள்ள பள்ளிகளுக்கு ரூ. 5 ஆயிரம், 9, 10 வகுப்புள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 7 ஆயிரம், 6 முதல் 10 வரையுள்ள பள்ளிகளுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்பட்டது. 

இத்தொகையை சமீபத்தில் மேலும் அதிகரித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி நேற்று கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சாதனங்களை மேம்படுத்தவும், ஏற்கனவே வழங்கப்பட்ட வசதிகளை பழுதுபார்ப்பதும் அவசியம். இதனடிப்படையில் 3 வகுப்பறை உள்ள பள்ளிகளுக்கு ரூ. 5 ஆயிரமும், 3 வகுப்பறைக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்