தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.6.18

ஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள்

ஜாக்டோ-ஜியோ-வின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டத்தின் போது இன்று பிற்பகலில், அங்கன்வாடி (ம) உதவியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் டி. டெய்சி அவர்கள் சர்க்கரை அளவின் அதீத மாற்றத்தால் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் தலைவரும், இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும், ஜாக்டோ-ஜியோவின் நிதிக் காப்பாளருமான தோழர். மோசஸ் அவர்கள் மயக்கமுற்றார். (தோழர் சில மாதங்களுக்கு முன்னர் தான் இருதய அடைப்பு தொடர்பாக ஆஞ்சியோ சிகிச்சை செய்திருந்தார். இன்று அவரது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.) இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.



 
முதற்கட்ட சிகிச்சையை முடித்த கையோடு தோழர் டெய்சி அவர்களும், தோழர் மோசஸ் அவர்களும் *மீண்டும் உண்ணாவிரதப் போராட்டக் களத்திற்கே திரும்பி, தங்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்