தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.6.18

தஇஆச மாநிலப் பொதுக் குழுக் கூட்ட முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இன்று (30-06-2018) நடைபெற்றது.

மாநிலத் தலைவர் மதலை முத்து தலைமை தாங்கினார். திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர் சாய் லதா ராஜ் அனைவரையும் வரவேற்றார்.


மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநிலப் பொருளாளர் தியாகராஜன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், இதழ் அறிக்கையை தாக்கல் செய்தார்.

தஇஆச நிறுவனரும் மேனாள் பொதுச் செயலாளருமான திரு. சுப்ரமணியன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேரா. மோகனா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

மாநில இணைச் செயலாளர் ஸ்டீபன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.

2. இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்ட பதவியுயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும்.

3. தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

4. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்.

5. அரசாணை 56-இன் படி அமைக்கப்பட்ட பணியாளர் பகுப்பாய்வு குழுவினை ரத்து செய்ய வேண்டும்.

6. அரசாணை எண். 100 & 101 மூலம் அரசுப் பள்ளிகளை மூடுவதை ரத்து செய்ய வேண்டும்.

7. ஊதியக் குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

8. ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர் மட்டக் குழு உறுப்பினர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

9. 1 முதல் 7 வரையுள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஜூலை 5ஆம் நாள் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்விச் செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது, ஜூலை 24-ஆம் நாள் மண்டல அளவில் 5 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 11-இல் சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடத்துவது.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்