தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.2.12

'தானே' புயல் நிவாரணம் - ஆசிரியர்கள் மற்றும்அரசு ஊழியர்களின் பங்கு மட்டும், 60 கோடி

'தானே' புயல் நிவாரணத்துக்காக, முதல்வர் விடுத்த அழைப்பை ஏற்று, அதிகளவு நன்கொடை குவியும் என எதிர்பார்த்த நிலையில், தொழில் துறையினரிடம் இருந்து, அதிக நிதி வரவில்லை. இதுவரை கிடைத்துள்ள, 103.87 கோடி ரூபாயில் பெரும் பகுதி, ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம் இருந்தே பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

'தானே' புயல் நிவாரணத்திற்கு, பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்கும்படி, கடந்த மாத துவக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, அரசு ஊழியர் சங்கங்கள் தாங்களாக முன்வந்து, தங்கள் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ளும்படி, கோரிக்கை விடுத்தன.
 

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பங்கு: அதை ஏற்று, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை வாரியங்கள் ஆகியவற்றின், ஊழியர்களது ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுவரை, 103.87 கோடி ரூபாய் வசூலான நிலையில், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பங்கு மட்டும், 60 கோடி ரூபாய் வரை இருக்கும். அதிகபட்சமாக, டாஸ்மாக் சார்பில் ஏழு கோடி ரூபாயும், மின் வாரியம் சார்பில் எட்டு கோடி ரூபாயும் வழங்கப்பட்டது. 

நிறுவனங்கள்: தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், 2.35 கோடி ரூபாய் வழங்கியது. மற்றபடி, பல்வேறு வங்கிகள் தலா ஒன்று மற்றும் இரண்டு கோடி என, வழங்கி உள்ளன. அமால்கமேஷன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நிதி வழங்கின; சிறிய நிறுவனங்கள் அதிகளவில் நிதி வழங்கவில்லை.
 

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்