குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் குறித்து,  பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை  அறிவித்துள்ளது. 
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: குழந்தைகளுக்கான  இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ், வரைவு விதிகள்  தயார் செய்யப்பட்டு, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள்  ஆகியோரின் பார்வைக்காக, www.pallikalvi.in, www.tn.gov.in/schooleducation ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆர்வம் உள்ளவர்கள், தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை,  டிசம்பர் 20ம் தேதிக்குள், "இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி),  பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6' என்ற முகவரிக்கு அஞ்சலிலோ அல்லது jdhssed@nic.in என்ற இ-மெயில் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக