தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.12.10

8ம் வகுப்புக்கு நிதி சார்ந்த பாடம் வரும் கல்வியாண்டில் அறிமுகம்

நிதி சார்ந்த பாடத்திட்டம் வரும் கல்வியாண்டிலிருந்து எட்டாம் வகுப்பு, பிளஸ் 1  மாணவர்களுக்கு  அறிமுகப்படுத்தப்படுகிறது. 
சமச்சீர் கல்வி முறையில் கூடுதல் பாடமான இதில் எட்டாம் வகுப்புக்கு  நிதி மேலாண்மை, பிளஸ் 1க்கு "நிதித்துறையும், மார்க்கெட்டும்" என்ற புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பணம் பற்றிய விளக்கம், வருமானம், செலவு, சேமிப்பு, வங்கிகள், இவற்றின் செயல்பாடுகள், மார்க்கெட்  விவரங்கள் உள்ளன. 

முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதால் இதுகுறித்து சில ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆசிரியர்கள், பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். 

இதற்கென தனியாக ஒரு பாடவேளை ஒதுக்கப்படுகிறது. 

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்