மேலவைத் தேர்தலில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.
டிசம்பர் 6-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், பெயர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும். பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
எங்கெங்கு வைக்கப்படும்: மேலவைத் தேர்தலில் பட்டதாரி தொகுதிகளில் வாக்களிக்க 3 லட்சத்து 11 ஆயிரத்து 681 பேரும், ஆசிரியர் தொகுதிகளில் வாக்களிக்க 72 ஆயிரம் பேரும் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த மனுக்களை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் சென்னையில் மாநகராட்சி அலுவலகம், அதன் மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில் தாலுகா அலுவலகங்களில் ஒட்டப்பட்டு இருக்கும்.
இறுதி பட்டியல்: டிசம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கும். டிசம்பர் 29-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதிப் பட்டியல் வெளியானால் மேலவைத் தேர்தலுக்கு தமிழகம் தயாரானதாக அர்த்தம். ஏனென்றால், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு இறுதியாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 78 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் 26 ஆகும். ஆளுநர் 12 பேரை நியமனம் செய்வார். ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தலா ஏழு தொகுதிகளுக்கு (மொத்தம் 14) வாக்களிப்பர். எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 பேரும் தேர்வு செய்யப்படுவர்.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
22.11.10
மேலவை: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
'தானே' புயல் நிவாரணத்துக்காக, முதல்வர் விடுத்த அழைப்பை ஏற்று, அதிகளவு நன்கொடை குவியும் என எதிர்பார்த்த நிலையில், தொழில் துறையினரிடம...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவல...
-
"ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்...
-
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) 05ஆம் அகில இந்திய மாநாடு 2012, மே மாதத்தின் 17, 18 மற்றும் 19ஆம் தேதி களில் தமிழகத்தின் கன்...
-
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு, 7 சதவீத அகவிலைப்படி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்...
-
அரசாணை எண்: 237 நிதித்(ஊதியப் பிரிவு)துறை நாள்: 22-07-2013 .
-
Mr. President, Dignitaries in Dais and Fellow Delegates from all over India, across the length and breadth of India from Kashmir to Kanyaku...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக