தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.3.10

முறைகேடான இடமாற்றம் - கல்வித்துறையைக் கண்டித்து ஆர்பாட்டம்

இடைநிலை ஆசிரியர் திரு. செல்வராஜ் முறைகேடாக மாறுதல் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து 25-03-2010 மாலை 5மணி அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.


த.இ.ஆ.ச. மாவட்டத் தலைவர் திரு.சேம் பிறின்ஸ் குமார் தலைமை தாங்கினார்.

 மாவட்டச் செயலாளர்  திரு. பாஸி முன்னிலை வகித்தார்.

திரு. பூதலிங்கம்பிள்ளை ஆர்பாட்டத்தைத் துவக்கிவைத்தார்.

 தோழமைச் சங்க நிர்வாகிகள் திருவாளர்கள் சிம்சன், பிரிட்டோ, நாகராஜன், சேவியர், இராதாகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், விக்ரமன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.

த.இ.ஆ.ச. மாநில அமைப்புச் செயலாளர் திரு. இசக்கியப்பன் ஆர்பாட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார்.

திரு. திவாகரன் பிள்ளை நன்றி கூறினார்.
கோரிக்கையை  வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்