தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.2.11

திருநெல்வேலியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி பாளையங்கோட்டையில் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 17-ந் தேதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பெ.பாலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பா.சங்கரவேலாயுதம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மூட்டா மாவட்டச் செயலர் வெ. அ. ராதாகிருஷ்ணன், கல்லூரி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எம். மகாராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலச் செயலர் ஜெ. எட்வர்ட் ஜெபசீலன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் பி. மனோகரன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் சி. போத்திலிங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் கே. இசக்கியப்பன், மாவட்ட அமைப்பாளர் கே. மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷமிட்டனர்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்