தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.6.10

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல்

நாகர்கோவில் அருகே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர்.​ ​ ​ 

நாகர்கோவிலை அடுத்த பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்போன்சம்மாள் ​(47).​ அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.​ தெங்கம்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பொட்டல்விளை பகுதியில் மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார்.​ ​ ​ வியாழக்கிழமை மாலையில்,​​ பொட்டல்விளையிலுள்ள வி.​ வேலப்பன் ​(32) என்பவரின் வீட்டுக்குச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களைக் கேட்டு உரிய படிவத்தில் பதிவு செய்து கொண்டிருந்தார்.​ ​​ ​ அப்போது வீட்டில் வேலப்பன்,​​ அவரது தாய் கமலம்,​​ அண்ணன் முருகன் ஆகியோர் இருந்தனர்.​ இரணியலைச் சேர்ந்த இவர்கள் பொட்டல்விளையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.​ அவர்களிடம் அல்போன்சம்மாள் பல்வேறு விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஆத்திரமடைந்த வேலப்பன் அவரைத் தாக்கினார்.​ ​ ​ இதில் நிலை குலைந்து அல்போன்சம்மாள் கீழே விழுந்தார்.​ அவர் வைத்திருந்த ஆவணங்களும் சிதறி விழுந்தன.​ ​ 

​ இது தொடர்பாக,​​ சுசீந்திரம் போலீஸில் அல்போன்சம்மாள் புகார் செய்தார்.​ அதன்பேரில்,​​ போலீஸôர் வழக்குப் பதிந்து வேலப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 நன்றி: 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்