இடைநிலை, பட்டதாரி, தமிழாசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர், தலைமை ஆசிரியர்களைக் கொண்ட "இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பினர்" அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடம் பறிப்பு, கல்வி அலுவலர் பதவி உயர்வு சதவீதம் குறைப்பு, இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துதல், தொகுப்பாசிரியர்களுக்கு பணிவரன் முறை என பத்து கோரிக்கைகளை தெரிவித்தனர். இதில் சில சலுகை பறிப்புகள் முதுகலை ஆசிரியர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என தெரிவித்தனர். இதற்காக சென்னையில் பேரணி, ஒரு லட்சம் கடிதம் அனுப்புதல் என, நடவடிக்கையில் ஈடுபட்டனர். தங்களை அரசு அழைத்துப் பேச வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், இந்த ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள், கூட்டமைப்பின் எதிர்பார்ப்பு குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்தது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி தலைமையில் ஆசிரியர் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில செயலர் சாமிசத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் தம்பித்துரை, தமிழாசிரியர் கழகத்தின் ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் சங்கரபெருமாள், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடத்தை ரத்து செய்த உத்தரவை ஓரிரு நாளில் ரத்து செய்து அறிவிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். பதவி உயர்வு சதவீதம், பணிவரன் முறை உட்பட பிற கோரிக்கைகள் குறித்து அமைச்சர் அளவில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என ஆலோசனை தெரிவித்தனர்.
கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், "ஏற்கனவே தெரிவித்த கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து பதில் தருவதாக தெரிவித்துள்ளனர். திருப்தி அளிக்காவிட்டால் அறிவித்தபடி போராட்டங்கள் நடக்கும்" என்றனர்.
.
- முகப்பு
 - தலைப்புகள்
 - மாநில பொறுப்பாளர்கள்
 - மாவட்ட நிர்வாகிகள்
 - இயக்க நடவடிக்கைகள்
 - மாநில மாநாடு - 2007
 - 'நமது முழக்கம்' மின்னிதழ்
 - பள்ளி நாள்காட்டி 2016 - 17
 - படிவங்கள்
 - தமிழ்நாடு கல்வி விதிகள்
 - துறைத் தேர்வுகள்
 - அரசாணைகள்
 - எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
 - இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
 - தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
 - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
 
31.12.09
கூட்டமைப்புடன் பள்ளிக் கல்வித்துறை பேச்சு நடத்தியது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
- 
25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி ஏப்ரல் 19ம் தேதி தமிழக முதல்வருக்கு பேக்ஸ் அனுப்பும் இயக்கம் நடத்...
 - 
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
 - 
தமிழகத்தின் 24 வது கவர்னராக ரோசய்யா இன்று மாலை பதவியேற்றார். அவருக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்....
 - 
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
 - 
நாகர்கோவில் அருகே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர்.   நாகர்கோவிலை அட...
 - 
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப...
 - 
மத்திய அரசுக்கு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் போராட்டத்தின் விளைவ...
 - 
5757_A2_2012 Deployment All Schools Circular-13.07 Deployment 13.07
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக