தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.6.16

அரசாணை வெளியிட்ட பின்பும் புதிய ஓய்வூதியத் திட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி

அரசாணை வெளியிட்டும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு புது பென்சன் திட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். 2003 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் படி இத்தேதியில் இருந்து பணிக்கு சேர்ந்த வர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் 4.50 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். இத் திட்டத்தினால் ஓய்வூதியம் பாதிக்கப் பட்டதோடு பணிக் கொடை, வருங்கால வைப்பு நிதிக் கடன், கமிட்டேசன் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் பறிபோனது.

மேலும், புதிய பென்ஷன் திட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ள தொகையும் ஒய்வு பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. 2011 தேர்தலின் போது புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சங்க நிர்வாகிகளைக் கூட அழைத்துப் பேசவில்லை. இதனால் நொந்து போன அரசு ஊழியர்கள் படிப்படியாக தங்கள் போராட்டத்தை விரிவுப்படுத்தினர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் என்று ஒரு கட்டத்தில் கலெக்டர் அலுவலகங்களில் தங்கியிருக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டம் முற்றியதால் கடந்த பிப்.19ம் தேதி புதிய பென்சன் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற, இறந்த, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு இதற்கான பணப்பலன் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். தொடர்ந்து பிப்.22ல் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பலரும் இதற்காக விண்ணப்பித்தனர். ஆனால் இன்று வரை அலைக்கழிப்பே இவர்களுக்கு மிஞ்சுகிறது.

இணைப்புப் படிவம் இல்லை, பணி பதிவேடு நகல் இல்லை, பணி விடுவிப்பு ஆணை இணைக்கப் படவில்லை என்று தொடர்ந்து தாமதப்படுத்தும் முயற்சிகளே நடந்து கொண் டிருக்கி றது. இதனால் அரசாணை வெளியிட்டும் புதிய பென்சன் திட்ட பணப் பலன்களை ஓய்வு பெற்ற பலரும் பெற முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்