தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.8.10

கையெ​ழுத்து இல்​லா​மல் சம்​ப​ளம் பெற​லாம்

மாநில அரசு ஊழி​யர்​கள் சம்​ப​ளப் பட்​டிய​லில் கையெ​ழுத்​துப் போடா​மல் சம்​ப​ளம் பெற்​றுக் கொள்​ள​லாம் என்று தமி​ழக அரசு உத்​த​ர​விட்​டுள்​ளது.​ இந்த உத்​த​ர​வால் பெரும் குழப்​பங்​கள் உரு​வா​கக் கூடும் என அரசு ஊழி​யர்​கள் அச்​சம் தெரி​வித்​துள்​ள​னர்.​​ ​ ​ 

அரசு ஊழி​யர்​கள் மற்​றும் ஆசி​ரி​யர்​க​ளுக்கு ஒவ்​வொரு மாத இறு​தித் தேதி​யி​ல் சம்​ப​ளம் வழங்​கப்​பட்டு வரு​கி​றது.​ யார் யாருக்கு எவ்​வ​ளவு சம்​ப​ளம் என்​பது குறித்த விவ​ரங்​கள் பட்​டி​ய​லா​கத் தயா​ரிக்​கப்​ப​டும்.​ ஊழி​யர்​க​ளின் சம்​ப​ளப் பட்​டி​யலை அர​சுத் துறை​கள் மற்​றும் பள்​ளி​க​ளின் தலை​வர்​கள் தயா​ரித்து கரு​வூ​லத் துறைக்கு அனுப்பி வைப்​பர்.​​ கரு​வூ​லத்​தில் இருந்து சம்​ப​ளம் வழங்​கப்​ப​டும்.​ சம்​ப​ளம் பெற்​றுக் கொண்​ட​தற்​கான ஒப்​பு​கையை அதற்​கான படி​வத்​தில் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி அரசு ஊழி​யர்​கள் கையெ​ழுத்​திட்டு வந்​த​னர்.​​ 

புதிய உத்​த​ரவு:​​ இப்​போது,​​ அரசு ஊழி​யர்​கள் மற்​றும் ஆசி​ரி​யர்​கள் அனை​வ​ருக்​கும் தேசிய மய​மாக்​கப்​பட்ட வங்​கி​க​ளில் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.​ இந்த வங்​கி​கள் மூலம் அவர்​க​ளுக்​குச் சம்​ப​ளம் வழங்​கப்​ப​டு​கி​றது.​ அனை​வ​ரும் ஏ.டி.எம்.​ அட்​டை​யைப் பயன்​ப​டுத்தி சம்​ப​ளத்தை எடுத்து வரு​கின்​ற​னர்.​​ ​ 

இந்த நிலை​யில்,​​ தமி​ழக அரசு புதிய உத்​த​ரவு ஒன்​றைப் பிறப்​பித்​துள்​ளது.​ இந்த உத்​த​ர​வுப்​படி,​​ ஸ்டாம்ப் ஒட்டி படி​வத்​தில் கையெ​ழுத்​துப் போடத் தேவை​யில்லை என​வும்,​​ ​ ஒவ்​வொரு மாத​மும் சம்​ப​ளம் பெற்​றுக் கொண்​ட​தற்​கான விவ​ரங்​கள்,​​ எவ்​வ​ளவு சம்​ப​ளம் போடப்​பட்​டது என்​பது போன்ற தக​வல்​களை கரு​வூ​லத் துறை​யி​டம் வழங்​கும் பட்​டி​யல் மூலம் தெரிந்து கொள்​ள​லாம் என​வும் கூறி​யுள்​ளது.​​ ​ ஆனால்,​​ இந்த உத்​த​ரவு தமி​ழ​கத்​தின் பெரும்​பா​லான மாவட்​டக் கரு​வூ​லங்​க​ளில் பின்​பற்​றப்​ப​ட​வில்லை என அரசு ஊழி​யர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​ற​னர்.​​ 

சம்​ப​ளப் பட்​டி​யல் இல்லை:​​ இது​கு​றித்து,​​ அவர்​கள் கூறி​யது:​​ ​ ​ சம்​ப​ளப் பட்​டி​யலை கரு​வூ​லத் துறை​யி​டம் இருந்து பெற்​றுக் கொள்​ள​லாம் என தமி​ழக அரசு கூறு​கி​றது.​ ஆனால்,​​ இந்​தப் பட்​டி​ய​லைத் தரு​வ​தற்கு கரு​வூ​லத் துறை மறுக்​கி​றது.​ மாவட்​டக் கரு​வூ​லங்​க​ளில் பணி​யா​ளர் பற்​றாக்​குறை நில​வு​வ​தா​க​வும்,​​ இத​னால் அரசு ஊழி​யர்​க​ளுக்​கான சம்​ப​ளப் பட்​டி​ய​லைத் தனி​யாக தயா​ரித்து வழங்க ​முடி ​யாது என்​றும் கூறு​கின்​ற​னர்.​ ஒவ்​வொரு மாத​மும் சம்​ப​ளத்​தில் எவ்​வ​ளவு பிடித்​தம் செய்​யப்​பட்​டது என்​கிற விவ​ரம் பட்​டி​யல் கிடைத்​தால்​தான் தெரி​யும்.​ ஆனால்,​​ அதைத் தர கரு​வூ​லத் துறை மறுக்​கி​றது என்று அரசு ஊழி​யர்​கள் தெரி​வித்​த​னர்.​​ ​

குழப்​பம் எழ வாய்ப்பு:​​ பய​ணப்​படி போன்ற படி​களை வங்கி மூலம் எடுக்​கும்​போது சில சம​யம் ஏற்​கெ​னவே உள்ள சம்​ப​ளப் பணத்​து​டன் அது சேர வாய்ப்பு இருக்​கி​றது.​ ​இத​னால்,​​ எவ்​வ​ளவு பணம் பய​ணப்​ப​டி​யாக வழங்​கப்​பட்​டது என்​கிற விவ​ரம் தெரி​யா​மல் போக​லாம் என்று ஊழி​யர்​கள் கருத்​துத் தெரி​விக்​கின்​ற​னர்.​​ ​ இத​னால்,​​ குழப்​பங்​கள் எழு​வ​தோடு,​​ கரு​வூ​லத் துறை ஊழி​யர்​கள் செய்​யும் தவ​று​க​ளும் மறைக்​கப்​பட்டு விடும் என்​கின்​ற​னர் அரசு ஊழி​யர்​கள்.​ எனவே,​​ சம்​ப​ளப் பட்​டி​யலை கரு​வூ​லத் துறை வழங்​கு​வ​தற்கு அரசு உரிய ஏற்​பா​டு​க​ளைச் செய்ய வேண்​டும் என்​பதே ஊழி​யர்​க​ளின் எதிர்​பார்ப்பு.

அரசாணை  எண்: 175 நாள்: 18-06-2010

நன்றி:



       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்