தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.10.17

தஇஆச மாநிலச் செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 29/10/2017 அன்று நடைபெற்றது.

அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழக அரசு அறிவித்த ஏழாவது ஊதிய குழு அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை முழுமையாக களைந்து இழப்பை சரிசெய்து திருத்திய அரசாணை வெளியிட வேண்டும். வெளியிட வில்லை என்றால் ஜாக்டோ ஜியோவோடு இணைந்து போராடுவது.

2. அரசு/ அரசு உதவி பெறும் / மாநகராட்சி/நகராட்சி/ உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரியாக உட்படுத்துக.

3. ஊதியக் குழு நிலுவைத்தொகை(22 மாதம்) உடனே வழங்க வேண்டும்.

4. CPS  ரத்து செய்ய வேண்டும்..

5. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்