தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. வீட்டுப்பட்டியல் தயாரிப்பு மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் பிப்., 9 ல் துவங்கி 28 வரை நடக்கிறது. 28 ல் வீடற்றோர், தெருவோரங்களில் வாழ்வோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மார்ச் 1 முதல் 5 வரை கணக்கெடுப்பு காலத்தில் ஏற்பட்ட பிறப்பு இறப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே மக்கள் தொகை விவரம் அறிவிக்கப்படும்.
கணக்கெடுப்பு குறித்து, தலைமை பயிற்சியாளர்களுக்கு டிச., 14 முதல் 16 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி அளிக்கின்றனர்.
மூன்றாம் கட்ட பயிற்சியின் போது, கணக்கெடுப்பு படிவங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும், கணக்கெடுப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
முதன்முறையாக பிப்., 6 ல் துவங்கி, 8 வரை கணக்கெடுப்பாளர்களுக்கு தங்கள் கணக்கெடுப்பு பகுதிகளை சரிபார்க்க விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, அரை நாள் விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்கள் கணக்கெடுப்பு பகுதியை, வீட்டு பட்டியல் புத்தகத்தில் உள்ளவாறு உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தவறு இருந்தால், உடனடியாக திருத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
14.12.10
மக்கள் தொகை கணக்கெடுப்பு - டிச., 27 முதல் பிப்.,2 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, மூன்று கட்ட பயிற்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகங்களுள் ஒன்றாக திகழ்கிறது, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகம். இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத...
-
Student DCF
-
"ஏற்கனவே திருமணமான மத்திய அரசு ஊழியர், மற்றொரு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்...
-
அசோகச் சக்கரவர்த்தியோ அல்லது அக்பர் சக்கரவர்த்தியோகூட இந்தியா முழுமையும் செங்கோல் செலுத்தியதில்லை. ஆனால், காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற...
-
நாகர்கோவிலில் சிஇஓ, டிஇஓவை கண்டித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற...
-
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். ...
-
தண்ணீரில் உற்பத்தியாகும் எரிபொருளை பயன்படுத்தி, மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர், பைக்கை ஓட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேட்டூர், த...
-
"காப்பீடு, ஓய்வூதியத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழு...
-
கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக