தமிழகத்தில் மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியன்டல் பாடத்திட்டம் என நான்கு வகையான பாடத்திட்டம் அமலில் இருந்தன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே மாதிரியான பாடத்திட்டத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்திட தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு உயர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், மூட்டா அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்களும் கல்வியாளர்களும் சமூக சிந்தனையாளர்களும் கடந்த பல ஆண்டுகளாக நடத்திய கருத்தரங்குகள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள் இவற்றின் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு சமச்சீர் கல்வியை தமிழக அரசு மேற்சொன்ன நான்கு பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து பொது பாடத்திட்டத்தில் 1மற்றும் 6-ம் வகுப்பிற்கு அமல்படுத்தியது. இக்கல்வியாண்டில் 2 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி நடைமுறையில் வர இருந்தது. சமச்சீர் பாடத்திட்டம் தரமானதாக இல்லையென அரசு திட்டத்தை தற்காலிகமா ஒத்திவைத்தது. இது தொடர்பாக வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்று இன்று (18.07.2011) சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இந்தாண்டே அமல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.
பல அமைப்புகள் போராடி பெற்ற சமச்சீர் கல்வியினை அரசு காலம் தாழ்த்தாமல் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக அமல்படுத்திட கேட்டுக்கொள்கின்றோம். தமிழக அரசு சமச்சீர் கல்வியில் குறைபாடு இருக்கு என கருதினால் அரசு அமைத்துள்ள குழுவை பயன்படுத்தி அதில் மேலும் ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் இணைத்து குறைகளை நிவர்த்தி செய்து அந்த பாடத்திட்டத்தினை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தலாம். மிகுந்த உழைப்புடன் கடந்த ஓராண்டுகளாக தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில் உடனடியாக சமச்சீர் கல்வியை அமல்படுத்திட தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தமிழக மாணவர்களின் சார்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கின்றோம்.
இவண்
க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
19.7.11
சமச்சீர் கல்வி – தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகங்களுள் ஒன்றாக திகழ்கிறது, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகம். இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத...
-
Student DCF
-
"ஏற்கனவே திருமணமான மத்திய அரசு ஊழியர், மற்றொரு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்...
-
அசோகச் சக்கரவர்த்தியோ அல்லது அக்பர் சக்கரவர்த்தியோகூட இந்தியா முழுமையும் செங்கோல் செலுத்தியதில்லை. ஆனால், காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற...
-
நாகர்கோவிலில் சிஇஓ, டிஇஓவை கண்டித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற...
-
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். ...
-
தண்ணீரில் உற்பத்தியாகும் எரிபொருளை பயன்படுத்தி, மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர், பைக்கை ஓட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேட்டூர், த...
-
"காப்பீடு, ஓய்வூதியத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழு...
-
கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக