மேலவைத் தேர்தலில் பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளது.
டிசம்பர் 6-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள், பெயர்கள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெறும். பட்டியலில் பெயர் சேர்க்காமல் இருப்பவர்கள் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
எங்கெங்கு வைக்கப்படும்: மேலவைத் தேர்தலில் பட்டதாரி தொகுதிகளில் வாக்களிக்க 3 லட்சத்து 11 ஆயிரத்து 681 பேரும், ஆசிரியர் தொகுதிகளில் வாக்களிக்க 72 ஆயிரம் பேரும் தங்களது பெயர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த மனுக்களை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் சென்னையில் மாநகராட்சி அலுவலகம், அதன் மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில் தாலுகா அலுவலகங்களில் ஒட்டப்பட்டு இருக்கும்.
இறுதி பட்டியல்: டிசம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கும். டிசம்பர் 29-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதிப் பட்டியல் வெளியானால் மேலவைத் தேர்தலுக்கு தமிழகம் தயாரானதாக அர்த்தம். ஏனென்றால், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு இறுதியாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 78 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும்.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான தொகுதிகள் 26 ஆகும். ஆளுநர் 12 பேரை நியமனம் செய்வார். ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தலா ஏழு தொகுதிகளுக்கு (மொத்தம் 14) வாக்களிப்பர். எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 பேரும் தேர்வு செய்யப்படுவர்.
நன்றி:
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
22.11.10
மேலவை: வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை, பஸ்களில் ஏற்றாமல், கண்டக்டர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக புகார்கள் வந்துள்ளன. சென்னையில், இதுபோன்ற ஒரு ச...
-
தற்போது நடந்து வரும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், போதுமான தகவல்களை திரட்ட முடியாமல் கணக்கெடுப்பாளர்கள் அவதிப்படுகின்றனர். போதிய விழி...
-
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து 4ஆம் தேதி வர...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தென்காசி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 08/12/ 2019, ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிய...
-
2011ம் ஆண்டு முதல் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2 லட்சமாக உயரப் போகிறது. அதேசமயம், வருமான வரி விலக்குக்கான சேமிப்புகளின் அளவை குறைக்கலாம் என்...
-
N-M July. 2012

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக