பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 272 கோடி ரூபாய் அளவிற்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: "சி' மற்றும் "டி' பிரிவு அலுவலர்களுக்கு சென்ற ஆண்டை விட 500 ரூபாய் உயர்த்தி 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், "ஏ' மற்றும் "பி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் சிறப்பு போனசாக 1,000 ரூபாய் வழங்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கவும், முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தொகுப்பூதிய பணியாளர்கள், சத்துணவு திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாளர்கள், தினக்கூலியாக பணியாற்றி பணி நிரந்தரம் செய்யப் பட்ட பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு, சிறப்பு மிகை ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும். உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 272 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசாணை எண்: 01 நாள்: 02-01-2010
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
8.1.10
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
உலகளவில் குறிப்பிடத்தக்க நூலகங்களுள் ஒன்றாக திகழ்கிறது, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகம். இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத...
-
Student DCF
-
"ஏற்கனவே திருமணமான மத்திய அரசு ஊழியர், மற்றொரு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்...
-
அசோகச் சக்கரவர்த்தியோ அல்லது அக்பர் சக்கரவர்த்தியோகூட இந்தியா முழுமையும் செங்கோல் செலுத்தியதில்லை. ஆனால், காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற...
-
நாகர்கோவிலில் சிஇஓ, டிஇஓவை கண்டித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப் படிப்பு வரையில் பெற...
-
தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். ...
-
தண்ணீரில் உற்பத்தியாகும் எரிபொருளை பயன்படுத்தி, மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர், பைக்கை ஓட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேட்டூர், த...
-
"காப்பீடு, ஓய்வூதியத் திட்டத்தில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை' என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழு...
-
கற்பித்தலுக்கான உபகரணங்கள் வாங்குவது என்ற பெயரில், தமிழகத்தின், அனைவருக்கும் கல்வி திட்ட பள்ளிகளின் வளர்ச்சி நிதியை, கர்நாடகாவிற்கு தாரை வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக