முதல் கட்ட சென்சஸ் பணியில் ஈடுபட்டவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள் உழைப்பூதியம் வழங்கப்படுகிறது.
சென்சஸ்-2011 பணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பணி, கடந்த ஜூலையில் முடிந்தது. இதில் ஈடுபட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு, இதுவரை உழைப்பூதியம் வழங்கவில்லை.
இரண்டாம் கட்ட சர்வே வரும் பிப்., 9ல் துவங்குகிறது. இப்பணி முழுமையாக நடக்க, முதல் கட்ட சர்வேக்கான உழைப்பூதியம் தருவது அவசியம் என, அதிகாரிகள், தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் உழைப்பூதியம் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, இப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக