6.10.12

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 1.7.2012 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 1.7.2012 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,443 கோடியே 52 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 362 நாள்: 05-10-2012 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக