17.6.11

நாளை பள்ளிகளை திறக்க அரசு தடை

தமிழகத்தில் பள்ளிகளை நாளை (ஜூன் 18) திறக்கக் கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு, கடந்த ஜூன் 15ம் தேதி துவங்கியது. புத்தகங்கள் இல்லாத நிலையில் வகுப்புகள் நடந்து வருகின்றன. பொதுவாக, சனிக்கிழமைகளில் தனியார் பள்ளிகள் பல செயல்படும். கல்வி ஆண்டு தாமதமாக துவங்கியதால், நாளை பல பள்ளிகள் செயல்படும் என அறிவித்து இருந்தனர். 

இந்நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என, அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அரசு தெரிவித்தது. இதன்படி பள்ளிகளை திறக்கக் கூடாது என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக