26.6.11

மக்கள்தொகை கணக்கெடுப்பு மதிப்பூதியம் வழங்க அனுமதி

மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு மதிப்பூதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. 

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான பணிகள், கடந்த 2010 ஜூன் முதல் துவங்கியது. முதற்கட்டமாக வீட்டு பட்டியல் தயாரிப்பு பணிகள் நடந்தன. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த பிப்., 9 முதல் பிப்., 28 வரை நடந்தது. 
 
இப்பணியில் ஈடுபட்ட கணக்கெடுப்பாளர்கள், மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு தலா 4,050 ரூபாய் வீதம் மதிப்பூதியம் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன. இத்தொகை கிடைக்காதவர்கள், மாவட்டங்களில் செயல்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக