29.3.11

தேர்தல் பணியில் மாணவர்களின் பங்கு

தேர்தல் பணியில் வழக்கமாக ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிவது வழக்கம். இந்தாண்டு மாணவர்களையும் களமிறக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் கமிஷன் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது
  • பெற்றோர்கள் தவறாமல் ஓட்டுபோடுவது பற்றியும், சுமுகமாக தேர்தல் நடைபெற வேண்டியது குறித்தும், அதை காலை நேரங்களில் பள்ளி பிரார்த்தனையின் போது மாணவர்களுக்கு விளக்க வேண்டும். 
  • தேர்தல் நாளன்று ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய பெற்றோர், உறவினர்களுடன் ஓட்டுச் சாவடிக்கு செல்ல வேண்டும். ஓட்டுப் போட்டார்களா கைவிரலில் மை உள்ளதா என்பதை பார்க்குமாறு அறிவுரை வழங்க வேண்டும். 
  • என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஓட்டின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
  •  தேர்தல்விழிப்புணர்வு குறித்து கமிஷன் வெளியிட்டுள்ள படக்காட்சிகளை மாணவர்களுக்கு தவறாமல் காண்பித்து பாடம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக