6 முதல் 10 வரை கற்பிக்கும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல மறியல் ஆயத்த மாநாடு - ஆலோசனைக் கூட்டம் அரசு ஊழியர் சங்க இல்லத்தில் தலைமை ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் பால்ராஜ் தலைமையில் நடந்தது.
தொடர்பாளர் ஜாண் பிரிட்டோ, அமைப்பாளர் தனிஸ்லாஸ், நிதிக்காப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்டத்தொடர்பாளர் மோகன சுந்தரம், தூத்துக்குடி மாவட்ட தொடர்பாளர் விவேகானந்தன் ஆகியோர் விளக்கவுரை தந்தனர்.
வருகிற பிப்ரவரி 7-ம் தேதி மாநிலத் தீர்மானப்படி குமரி மண்டல மறியல் ஆயத்தமாநாடு நடத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து தலா 500 பேர் வீதம் கலந்து கொள்வதாக தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
குமரி மாவட்ட இயக்க பொறுப்பாளர்களான ஈஸ்டர் அமல்ராஜ், முத்தையா ஆசாரி, வேலவன், ஜோஸ் டைட்டஸ்,செம்பியன், கிருஷ்ணசாமி சாம்சுதாகர், பாசி, சுரேஷ்குமார், சித்தார்த்தன், பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராஜன் நன்றி கூறினார்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக