தமிழகம் முழுவதும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி ஆறு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பள்ளி கல்வித்துறை எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசு, தனியார் உயர்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படித்தவர்கள் 2003ம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியர்களாக 25 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2003க்கு பின் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் இல்லை. உயர், மேல்நிலைப்பள்ளிகளில் கல்வியியலில் பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர்கள் இப்போதும் பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
உயர், மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி இடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருவதால் இடை நிலை ஆசிரியர்கள் சதவீதம் குறைந்து வருகிறது. இவர்களுக்கு பதவி உயர்வு விகிதம் குறைவாக தரப்படுகிறது. ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு அரசு இரு வேறு ஊதியவிகிதத்தில் சம்பளம் வழங்கப்படுகிறது.
முன்பு செகண்டரி கிரேடு ஆசிரியர்களுக்கு கீழ், ஜூனியர் கிரேடு ஆசிரியர்களாக அரசு கொண்டு வந்த போது ஜூனியர் கிரேடு ஆசிரியர்களை இரண்டு மாத சிறப்பு பயிற்சி வழங்கி செகண்டரி கிரேடு ஆசிரியர்களாக ஏற்றுக்கொண்டது. முதல் நிலை தமிழாசிரியர்கள், இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் என கொண்டு வந்தது. இரண்டாம் நிலை தமிழாசிரியர்கள் முதல் நிலை தமிழாசிரியர்களாக பள்ளிக்கல்வித்துறை தரம் உயர்த்தியது. மேல்நிலை பள்ளிகள் துவக்கியபோது மேல்நிலை கல்வி கற்பிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி அவர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்தியது.
இதுபோன்று உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தக் கோரி ஆறு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பள்ளிக்கல்வித்துறை கண்டு கொள்ளவில்லை. இதுவரை பதவி உயர்வு, ஆறாவது சம்பளக்கமிஷன் பரிந்துரை என அனைத்து நிலையிலும் இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை இவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்த முன் வர வேண்டும்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
31.12.09
இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துக.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப...
-
இந்த இனிய விழாவில் முன்னிலையுரை ஆற்றிய மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துற...
-
ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது. ஆசிரியர் தகுதி த...
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு ஜாக்டோ-ஜியோ 4ஆம் தேதி கூட்டத்தை கூட்டி பதிலளிக்க உள்ளதாக தெரிவித...
-
N-M June. 2012
-
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய அர சுக்கு இணை யான ஊத...
-
பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் முப்பருவ கல்வி முறை மற்றும் கற்றலின் தொடர் மதிப்பீடு தொடர்பான பயிற்சி வகுப்புகளில் திட்டமிடல் இல்லை என, ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக